Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மட்டுடன் சென்றும் தலை நசுங்கி ஆசிரியர் பலி

ஆகஸ்டு 03, 2019 07:21

தேனி: ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த தீபா இடறி விழுந்ததில், ஸ்கூல் வேன் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி மாவட்டம் என்ஆர்டி நகரில் அமைந்துள்ளது பொன்ராஜா பள்ளி. இங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் தீபா. வயசு 28. இவரது வீடு பிசி பட்டியில் உள்ளது. வழக்கமாக தீபா ஸ்கூட்டியில்தான் ஸ்கூலுக்கு வருவார், போவார். கட்டாயம் ஹெல்மட்டும் அணிந்துதான் செல்வார். அப்படித்தான் ஸ்கூல் முடித்துவிட்டு தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

வார சந்தை கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது தீபாவின் ஸ்கூட்டி முன்னே இன்னொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதை கடக்க முயன்றபோது திடீரென தவறி விழுந்துவிட்டார். அந்த நேரம் பார்த்து, குழந்தைகளை ஏற்றி கொண்டு பின்னாடியே வந்த ஒரு ஸ்கூல் வேன், கீழே விழுந்த தீபாவின் தலையிலேயே ஏறி இறங்கிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூட்டியில் இருந்து எப்படி தவறி விழுந்தாரோ, அதே நிலையிலேயே உயிர் பிரிந்துவிட்டது. 

இதுகுறித்து உடனடியாக தேனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து டீச்சர் தீபாவின் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்கூல் வேன் டிரைவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்